⚖228.தினம்ஒரு மஸ்அலா23/07/20
*32.குர்பானியின் சட்டம்* ✍குர்பானி யாரின் மீது கடமையாகும்?
*பதில் :*
ஸதகதுல் ஃபித்ர் கொடுப்பது யாரின் மீது கடமையோ அவரின் மீது குர்பானி கொடுப்பது வாஜிபாகும்.
அதாவது துல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்களில் அத்தியாவசியத் தேவைகள் போக எவரிடம் 612.5 கிராம் வெள்ளியோ, 87.5 கிராம் தங்கமோ அல்லது அவர் குடியிருக்கும் வீடு, வீட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்கள், பயன்படுத்தும் வாகனம் போக, உபரியான மற்ற பொருட்களோ வியாபாரச் சரக்குகளோ, அல்லது பணமோ 612.5 கிராம் வெள்ளியின் மதிப்பளவு இருந்தால் குர்பானி கடமையாகி விடும். . 📚 ஃபதாவா ஹிந்தியா *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment