⚖226.தினம்ஒரு மஸ்அலா21/07/20
*30.குர்பானியின் சட்டம்* ✍இறந்தவர்களுக்காக குர்பானி கொடுத்தால் அதன் இறைச்சியை நாம் சாப்பிடலாமா? பதில்: இறந்தவர் தனது பொருளிலிருந்து குர்பானி கொடுக்க வேண்டுமென வஸிய்யத் செய்து விட்டு இறந்து இருந்தால் அதன் இறைச்சியை ஏழை எளியவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். செல்வந்தர், சையது வம்சத்தினருக்கு கொடுக்கக்கூடாது. இறந்தவர் வஸிய்யத் செய்திருந்தாலும், செய்யா விட்டாலும் அவருடைய பொருளிலிருந்து கொடுக்காமல்... தனது பொருளிலிருந்து கொடுத்தால் அப்போது தானே கொடுத்தால் என்ன சட்டமோ அதே சட்டம் தான் இந்த குர்பானியின் இறைச்சிக்கும். 📚ரத்துல்முக்தார்9/314 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment