⚖ தினம்ஒரு மஸ்அலா 09/06/20
✍189.நோயாளியின் தொழுகை களாவாகி விட்டால் என்ன சட்டம்? பதில்:அந்த நோயாளி தலையை அசைத்து சைகை மூலம் கூட ருகூஃ ஸஜ்தா செய்ய முடியாவிட்டால் அவர் தொழவேண்டாம். ஐவேளையும் இதே நிலையில் இருந்து பிறகு குணமாகி விட்டால் களா செய்வது கடமையாகும். அதே நிலையில் மரணித்து விட்டால் களாவும் இல்லை. பரிகார தொழுகை (ஃபித்யா) தருமாறு வஸியத் செய்ய வேண்டியதும் இல்லை ஐந்து நேர தொழுகையை விட அதிகமான நேரம் இவ்வாறு இருந்தால் அப்போது களாச் செய்வது கடமையில்லை. தொழுகைகள் மன்னிக்கப்பட்டுவிடும். 📚 ரத்துல் முக்தார் 8/135
Comments
Post a Comment