180.தினம் ஒரு மஸ்அலா-31/05/2020
180.கண் அறுவை சிகிச்சை செய்யாவிடில் பார்வை போய்விடும் நிலை உள்ளது. அறுவைசிகிச்சை செய்த சில நாட்களுக்கு சைக்கினை செய்து கூட தொழக்கூடாது என டாக்டர் கூறுகிறார்கள். இப்போது அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா?
பதில்: அறுவை சிகிச்சை செய்வது நிர்பந்தம் எனில் செய்து கொள்ளவும். தலையை அசைத்து தொழ முடிந்தால் அவ்வாறு தொழுது கொள்ளலாம். அப்போது களாச்செய்யக்கூடாது. முடியாவிட்டால் நிர்பந்தத்தின் பேரில் விடுபட்ட தொழுகைகளை களாச் செய்து கொள்ள அனுமதி உண்டு. நூல்: பதாவா ரஹீமிய்யா(1/195)
Comments
Post a Comment