142.சஹர் சாப்பிடாமல் நோன்பு வைக்கலாமா?
தினம் ஒரு மஸ்அலா -12/04/20 142.சஹர் சாப்பிடாமல் நோன்பு வைக்கலாமா? பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹர் செய்வதை ஆர்வமூட்டி கூறியுள்ளார்கள் . "ஸஹர்செய்யுங்கள்"! ஏனெனில் ஸஹர் உணவு பரக்கத் ஆனது( நூல் புகாரி)என்றும் ,ஒரு மிடறு தண்ணீர் குடித்தாவது ஸஹர் செய்யுங்கள். (நூல் :இப்னு ஹிப்பான்)என்றும் கூறியுள்ளார்கள். மேலும் நமது இஸ்லாமியர்களின் நோன்பிற்கும், யூத கிறிஸ்தவர்களின் நோன்பிற்கும் மத்தியில் பிரிவினை ஏற்படுத்த கூடியது ஸஹர் தான். (நூல்:முஸ்லிம் )என்றும் கூறி அதனை வலியுறுத்தியுள்ளார்கள். எனவே முடிந்த அளவு அதனை தப்பவிடக் கூடாது. என்றாலும் ஏதேனும் சந்தர்ப்பத்தினால் கண்ணயர்ந்து விடுவது போன்ற காரணத்தால் ஸஹர் செய்ய முடியாமல் போய் விட்டாலும் நிய்யத் வைத்து விட்டால் நோன்பு கூடிவிடும்.
Comments
Post a Comment