✍137.ரத்தம் கொடுப்பதாலும் வாந்தி எடுப்பதாலும் நோன்பு முறியுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -137(ஷரீஅத் சட்டம் )07/04/20 ✍ரத்தம் கொடுப்பதாலும் வாந்தி எடுப்பதாலும் நோன்பு முறியுமா? பதில்: ரத்தம் கொடுப்பதினால் நோன்பு முறியாது. ஹனபி மத்ஹப் படி வேண்டுமென்றே வாய் நிரம்ப வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். அதன் சில பகுதி உள்ளே செல்லா விட்டாலும் சரி! மாறாக தானாக வந்தால் அப்போது அதன் கொஞ்சத்தை வேண்டு மென்று விழுங்கினால், நோன்பு முறிந்துவிடும். ஏதும் மீண்டும் உள்ளே செல்லாவிட்டாலும் வேண்டுமென்றே விளங்காமல் அதுவாகவே உள்ளே சென்றாலும் நோன்பு முறியாது. 📚 மஸாயில் ரோஜா . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment