✍ 88.ஃபஜர் தொழுகையின் பாங்கில் "அஸ்ஸலாத்து ஹைறும் மீனன் னவ்ம்" என்று சொல்ல மறந்து விட்டால் அந்த பாங்கு கூடுமா? மீண்டும் சொல்ல வேண்டுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -88(ஷரீஅத் சட்டம் )18/02/20. ✍ ஃபஜர் தொழுகையின் பாங்கில் "அஸ்ஸலாத்து ஹைறும் மீனன் னவ்ம்" என்று சொல்ல மறந்து விட்டால் அந்த பாங்கு கூடுமா? மீண்டும் சொல்ல வேண்டுமா? பதில்:பாங்கிற்கு இடையிலேயே நினைவு வந்து விட்டால் அப்போது அந்த விடுபட்ட வார்த்தையைக் கூறி அதில் இருந்து கடைசி வரை உள்ள பாங்கின் மீதி வாசகங்களையும் கூறி முடிக்க வேண்டும்.பாங்கு சொல்லி முடித்த பின் நினைவுக்கு வந்தால் அப்போது விடுபட்ட வார்த்தையிலிருந்து மீண்டும் பாங்கை கூறவேண்டும் .ஆனால் நீண்ட நேரம் கழிந்து விட்டால் அப்போது மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. 📚பதாவா ரஹீமிய்யா4/297) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment