⚖ **தினம் ஒரு மஸ்அலா* -24(ஷரீஅத் சட்டம் )14 -12-19.
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -24(ஷரீஅத் சட்டம் )14 -12-19. ✍ மெஷின் மூலம் கோழிகள் அறுக்கப்படுகிறது. அதாவது கோழிகளை உயிருடன் மெஷினுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவற்றிற்க்கு கரண்ட் ஷாக் கொடுத்து மயக்கம் அடையுமாறு செய்யப்படுகிறது.பிறகு தானியங்கி பலகை மூலம் மெஷின் கத்திக்கருகில் கொண்டுவரப்படுகிறது.அங்கே ஒரு முஸ்லிம் பிஸ்மில்லாஹ் கூறி மெஷின் மூலம் கோழியை அறுக்கிறார் .முழு ரத்தமும் உயிரும் செல்வதற்கு முன்பே மெஷின் மூலம் வெந்நீரில் அதை போடப்பட்டு வெளியே எடுத்து இறக்கையை உரிக்கின்றனர்.அசுத்தத்தை தவிர்த்து உள்ளிருக்கும் அனைத்தையும் மெஷின் மூலம்சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அறுத்து சுத்தம் செய்து முடித்தபின் ஹலால் சிக்கன் என்று எழுதப்பட்ட டப்பாக்களில் அதை அடைக்கப்படுகிறது. இவ்வாறு அறுப்பதன் சட்டம் என்ன ? பதில்: மேற்கண்ட கேள்வியில்அறுக்கும்போது கோழிக்கு என்னென்ன நிலைகள் கூறப்பட்டதோ அவற்றைப் பார்க்கும்போது அதன்படிஅறுக்கப்பட்ட வற்றை சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை* . 📚பதாவா ரஹீமிய்யா 9/330).
Comments
Post a Comment